Saturday 17 February 2018

அறம் செய விரும்பு

அறம் செய விரும்பு

பொருள்:

எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் மனத் தூய்மையோடு வாழ ஆசைப்படு.

Tuesday 13 December 2011

சான்றோருக்குத் தீங்கிழைத்தல்

நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; பாவமற்ற, பரிசுத்தமான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; காற்றுக்கு எதிராகத் தூவிய மண் தூவியவன் மேலே வந்து விழுவதுபோல், அந்த மூடனைப் பாவம் பற்றிக் கொள்கிறது.

தண்டிக்கத் தகாதவர்களையும் குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துன்பப் படுத்துவோர் பின் கூறப்பட்டிருக்கும் பத்து நிலைகளில் ஒன்றை அடைவார்கள்

1.வேதனை
2.நஸ்டம்
3.உடலில் சேதம்
4.பெரு நோய்கள்
5.சித்தபிரமை
6.அரச தண்டனை
7.பயங்கரமான குற்றச்சாட்டு
8.உறவுகளை இழத்தல்
9.பொருள் அழிவு
10.வீடுகளில் இடி விழும்


நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்கிறானோ அவன்தான் நரகத்துக்குப் போவான்.

தீவினை அச்சம்

"தீவினை" என்பது தீய செயல்கள்.
 தீய செயல்கள் என்பது, நான் என்னும் அகந்தையில், தன் நலனப் பெரிதெனக் கருதி, பிறருக்குக் கேடு செய்தல் ஆகும்.

"தீவினை  அச்சம்" என்பது தீய செயல்களைக் கண்டு அஞ்ச வேண்டும். ஒருவன் தன் நலனைப் பெரிதெனக் கருதி பிறருக்குக் கேடு செய்தான் என்றால், அச்செயலால் மற்றவருக்குத் துன்பம் வருவதோடுமட்டுமின்றி, இவனுக்கும் அதன் பிற்பயன் துன்பம் தரும். தனக்கும், பிறருக்கும் துன்பம் கொடுப்பதால், தீய செய‌ல்களைக் கண்டு அஞ்ச வேண்டும்.

ஏன் அஞ்ச வேண்டும்?
தீய செயல்கள் இரண்டு உலகத்திலும் துன்பத்தைக் கொடுப்பதால் தீய செய‌லைக் க‌ண்டு அஞ்ச‌ வேண்டும்.

எப்ப‌டி அஞ்ச‌ வேண்டும்?
நெருப்பைவிட‌க் கொடிய‌து என‌க் க‌ருதி அஞ்ச‌ வேண்டும்.

இத‌னைத்தான் திருவ‌ள்ளுவ‌ர் இவ்வாறு சொல்கிறார்.
     தீய‌வை தீய‌ ப‌ய‌த்த‌லால் தீய‌வை
     தீயினும் அஞ்ச‌ப் ப‌டும்
அதாவ‌து, தீய‌ செய‌ல்க‌ள் பெரும் துன்ப‌த்தைக் கொடுப்ப‌தால், தீய‌ச் செய‌ல்க‌ள் நெருப்பினும் கொடிய‌தாக‌க் க‌ருதி அஞ்ச‌ வேண்டும்.நெருப்பு அதிக‌ ப‌ட்ச‌ம் இந்த‌ உட‌லைத்தான் அழித்து ம‌ர‌ண‌த்தைக் கொடுக்கும். நெருப்பு ஒருவ‌னை ந‌ர‌கத்துக்கு அனுப்பாது. ஆனால் தீய‌ செய‌ல்க‌ளோ, இங்கு துன்ப‌த்தைக் கொடுத்து, உட‌லை விட்டு உயிர் பிரிந்த‌ப்பின் ந‌ர‌க‌த்துக்கு அனுப்பும். ஆக‌வே, தீய‌ செய‌ல்க‌ளைத் தீயினும் கொடிய‌தாக‌க் க‌ருதி அஞ்சி, பாவ‌ங்க‌ள் செய்யாம‌ல் வாழ‌ வேண்டும் என்று திருவ‌ள்ளுவ‌ர் சொல்கின்றார்.

Wednesday 19 October 2011

கொடிய எண்ணங்கள்

மனத்தில் எழும் கொடிய எண்ணங்களால் உந்தப்பட்டு, நலம் தரும் நல்லுபதேசங்களை, ஊயிர்கள் அலட்சியப் படுத்திப் புறக்கணிக்கன்றன!
ஒரு கள்வனைப்போல், மனத்தில் எழும் கொடிய எண்ணங்கள், உயிர்களின் தூய்மையான வளர்ச்சிக்கு இடையூராக இருக்கின்றன.

விழித்தெழுகங்கள்! பாவங்கள் செய்யாதீர்கள்!

பிறவிப் பெருங்கடலில் உயிர்களின் அவல நிலையைக் கொஞ்சம் தியானியுங்கள்.

இந்த மனித உடல் என்னும் வீடு, மாதந்தோறும் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.

எந்நேரத்திலும் சரிந்து விழக்கூடிய இது வாழ்வதற்கு அபாய‌கரமானது.

தப்பித்துக்  கொள்ளுங்கள்! பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள்!

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!

பாவக் கருமங்கள் செய்வோர் தமக்கும் மரணம் வரும் என்பதைச் சிந்திப்பதில்லை.

நிலையற்ற இந்த உடல் அழிவதற்கு முன், உடலைவிட்டு உயிர் பிரிவதற்கு முன், பாதுகாப்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!
                                                                                                                                     -மிலர்ப்பா

தண்டனை

எந்த ஒரு செயல், செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

எவ்வகையான செயல் மனத்தை வருத்தும்?
பாவச் செயல், அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருத்தும்.

பாவ‌ம் என்றால் என்ன‌?
பாவ‌ம் என்ப‌து, த‌ன் சுக‌த்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிற‌ருக்குத் தீங்கு செய்த‌லாகும். தீய‌வை ந‌ம‌க்குத் துன்ப‌த்தைத் த‌ருவ‌துபோல், பிற‌ருக்கும் அது துன்ப‌த்தைத் த‌ரும் என்ப‌தை ம‌ற‌ந்து, நாம் ஒரு இலாப‌த்தை நாடி, பிற‌ருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்கிறோம்.

இதையே ப‌க‌வான் புத்த‌ர் இவ்வாறு விள‌க்கியுள்ளார்.
"இர‌க‌சிய‌மாக‌வோ, ப‌ல‌ர் அறிய‌வோ, இப்போது நீ தீய‌ செய‌லைச் செய்தாய் என்றால், பின்னால் அத‌னிட‌மிருந்து த‌ப்ப‌ முய‌ன்றாலும், நிச்ச‌ய‌மாக‌ நீ துன்ப‌ப்ப‌டுவாய்."

திருவ‌ள்ளுவ‌ரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்.

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேல‌வாம்"

அதாவ‌து, துன்ப‌ம் யாவும் துன்ப‌ம் செய்தோரையே நாடும்.

Sunday 18 September 2011

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள்

        
i)   மனதின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தீய எண்ணங்களால் கேடு வரும்.

ii)  நாவின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான சொற்களால் கேடு வரும்.

iii) உடலின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான செயல்களால் கேடு வரும்.

கோபத்தினால் வரும் துன்பங்களை பகவான் புத்தரும், திருவள்ளுவரும் இவ்வாறு விளக்குகிறார்கள்.


1.கோபக்காரன் முகமலர்ச்சியை இழப்பான்.
2.கோபக்காரன் அகமலர்ச்சியை இழ்ப்பான்.
3.கோபக்காரன் தூக்கம் இழப்பான்.
4.கோபக்காரன் நண்பர்களை இழப்பான்.
5.கோபக்காரன் உறவு இழப்பான்.
6.கோபக்காரன் அவமானப்படுவான்.
7.கோபக்காரன் புகழ் இழப்பான்.
8.கோபக்காரன் பொருள் இழப்பான்.
9.கோபக்காரன் நன்றி மறந்து கேடு செய்வான்.
10.கோபம் கோபத்தோடு மோதினால் அழிவு வரும்.
11.கோபக்காரன் அடுத்த உலகில் துன்பப்படுவான்.

Thursday 28 April 2011

சிந்திக்கச் சில.........


1.குறைபாடுகள்  உடையவ
ன்தான் மனிதன். குறை காண்பனும்  மனிதன்தான். பிறர் குறைகளைத் தேடுபவன் அரை மனிதன். தன் குறைகளைத் தேடுபவன் முழுமனிதன்.

2.பிறர் குறைபாடுகளை நம் கண் முன்னே காண்கிறோம். நம்குறை பாடுகளை மறைக்கின்றோம்.

3.மலர்களில் மணம் கமழுவது போல் நல்வினையால் புகழ் பரவும்.

4.கொடுப்பதால் நாம் செல்வம் பெருகும்; பெற்றுக் கொள்வதால் அன்று.

5.கருத்துடன் காண இரு கண்களூம் கருத்துடன் கேட்க இரு காதுகளும் குறைவாகப் பேச ஒரு நாக்கும் உள்ளன.

6.மிகப் பெரிய வெள்ளமும்  வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

7.கோபம் ஆறக் கூடியது. வெறுப்பு ஆறாது.வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்.

8.நம்மிக்கை இல்லாத வழிபாடு உயிரற்றது.

9.இரக்க குணம் மனிதனை உருவாக்குகிறது. அரக்க குணம் மனிதனை மிருகமாக்கிறது.

10.நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்.

11.அன்பு  உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்.

12.அன்பும் அறனும் இல்லாதவன் இறந்தவனுக்குச் சமம்.

13.அருட் செல்வத்தைப் பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னனாக சீரும் சிறப்புமாக‌ வாழலாமே!

14.தீய எண்ணங்களை அழிக்க  இறைவழிபாட்டைத் துணயாகக் கொள்.

15.சரியான கருத்துகள் மனதில் இருந்தால் நல்ல எண்ணம், இனிமையான சொல், சுகம் தரு
ம் செயல்கள் தோன்றும்.