Sunday 18 September 2011

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள்

        
i)   மனதின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தீய எண்ணங்களால் கேடு வரும்.

ii)  நாவின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான சொற்களால் கேடு வரும்.

iii) உடலின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான செயல்களால் கேடு வரும்.

கோபத்தினால் வரும் துன்பங்களை பகவான் புத்தரும், திருவள்ளுவரும் இவ்வாறு விளக்குகிறார்கள்.


1.கோபக்காரன் முகமலர்ச்சியை இழப்பான்.
2.கோபக்காரன் அகமலர்ச்சியை இழ்ப்பான்.
3.கோபக்காரன் தூக்கம் இழப்பான்.
4.கோபக்காரன் நண்பர்களை இழப்பான்.
5.கோபக்காரன் உறவு இழப்பான்.
6.கோபக்காரன் அவமானப்படுவான்.
7.கோபக்காரன் புகழ் இழப்பான்.
8.கோபக்காரன் பொருள் இழப்பான்.
9.கோபக்காரன் நன்றி மறந்து கேடு செய்வான்.
10.கோபம் கோபத்தோடு மோதினால் அழிவு வரும்.
11.கோபக்காரன் அடுத்த உலகில் துன்பப்படுவான்.