Wednesday 19 October 2011

கொடிய எண்ணங்கள்

மனத்தில் எழும் கொடிய எண்ணங்களால் உந்தப்பட்டு, நலம் தரும் நல்லுபதேசங்களை, ஊயிர்கள் அலட்சியப் படுத்திப் புறக்கணிக்கன்றன!
ஒரு கள்வனைப்போல், மனத்தில் எழும் கொடிய எண்ணங்கள், உயிர்களின் தூய்மையான வளர்ச்சிக்கு இடையூராக இருக்கின்றன.

விழித்தெழுகங்கள்! பாவங்கள் செய்யாதீர்கள்!

பிறவிப் பெருங்கடலில் உயிர்களின் அவல நிலையைக் கொஞ்சம் தியானியுங்கள்.

இந்த மனித உடல் என்னும் வீடு, மாதந்தோறும் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.

எந்நேரத்திலும் சரிந்து விழக்கூடிய இது வாழ்வதற்கு அபாய‌கரமானது.

தப்பித்துக்  கொள்ளுங்கள்! பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள்!

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!

பாவக் கருமங்கள் செய்வோர் தமக்கும் மரணம் வரும் என்பதைச் சிந்திப்பதில்லை.

நிலையற்ற இந்த உடல் அழிவதற்கு முன், உடலைவிட்டு உயிர் பிரிவதற்கு முன், பாதுகாப்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!
                                                                                                                                     -மிலர்ப்பா

தண்டனை

எந்த ஒரு செயல், செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

எவ்வகையான செயல் மனத்தை வருத்தும்?
பாவச் செயல், அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருத்தும்.

பாவ‌ம் என்றால் என்ன‌?
பாவ‌ம் என்ப‌து, த‌ன் சுக‌த்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிற‌ருக்குத் தீங்கு செய்த‌லாகும். தீய‌வை ந‌ம‌க்குத் துன்ப‌த்தைத் த‌ருவ‌துபோல், பிற‌ருக்கும் அது துன்ப‌த்தைத் த‌ரும் என்ப‌தை ம‌ற‌ந்து, நாம் ஒரு இலாப‌த்தை நாடி, பிற‌ருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்கிறோம்.

இதையே ப‌க‌வான் புத்த‌ர் இவ்வாறு விள‌க்கியுள்ளார்.
"இர‌க‌சிய‌மாக‌வோ, ப‌ல‌ர் அறிய‌வோ, இப்போது நீ தீய‌ செய‌லைச் செய்தாய் என்றால், பின்னால் அத‌னிட‌மிருந்து த‌ப்ப‌ முய‌ன்றாலும், நிச்ச‌ய‌மாக‌ நீ துன்ப‌ப்ப‌டுவாய்."

திருவ‌ள்ளுவ‌ரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்.

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேல‌வாம்"

அதாவ‌து, துன்ப‌ம் யாவும் துன்ப‌ம் செய்தோரையே நாடும்.