Tuesday 13 December 2011

சான்றோருக்குத் தீங்கிழைத்தல்

நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; பாவமற்ற, பரிசுத்தமான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; காற்றுக்கு எதிராகத் தூவிய மண் தூவியவன் மேலே வந்து விழுவதுபோல், அந்த மூடனைப் பாவம் பற்றிக் கொள்கிறது.

தண்டிக்கத் தகாதவர்களையும் குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துன்பப் படுத்துவோர் பின் கூறப்பட்டிருக்கும் பத்து நிலைகளில் ஒன்றை அடைவார்கள்

1.வேதனை
2.நஸ்டம்
3.உடலில் சேதம்
4.பெரு நோய்கள்
5.சித்தபிரமை
6.அரச தண்டனை
7.பயங்கரமான குற்றச்சாட்டு
8.உறவுகளை இழத்தல்
9.பொருள் அழிவு
10.வீடுகளில் இடி விழும்


நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்கிறானோ அவன்தான் நரகத்துக்குப் போவான்.

No comments:

Post a Comment