Tuesday 15 March 2011

அறத்தின் நன்மைகள்.....


 தர்மவழியில் நடப்போருக்கு ஐந்து நன்மைகள் வரும் என பகவான் புத்தர் கூறுகிறார்.

1.புகழ் வரும்.
இவர் அறவழியில் நடப்பதால், மக்கள் இவரின் அறத்தையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார்கள்.

2.செல்வம் பெருகும்.
இவர் அறநெறி அறிந்து தேடிய பொருள்,இவருக்கும் உதவும்.இவருடைய பிள்ளைகளளுக்கும் உதவும்.இவருடைய பரம்பரைக்கும் நிலைத்து நிற்கும்.


3.அச்சம் இருக்காது.
இவர் உள்ளத்தில் அச்சம் இருக்காது. எங்கெல்லாம் மக்கள் கூடியிருக்கறார்களோ அங்கெல்லாம் இவர் உள்ளத்தில் அச்சமில்லாமல் போவார். இவரிடம்  குற்றம் இல்லாததால், இவருடைய உள்ளத்தில் அச்சம் எழாது.

4.பயமில்லாத மரணம்.
மரணம் வரும்போது இவர் உள்ளத்தில் அச்சம் எழாது;மனதில் குழப்பம் எழாது.மகிழ்ச்சி எழும். அமைதியாக இறப்பார்.

5. அடுத்த பிறப்பு
உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் இவர் தெய்வலோகத்தில் பிறப்பார்.

1 comment:

  1. மலர்ந்த தாமரை போல் அற்புதமான கருத்துக்கள்.

    ReplyDelete