Tuesday 29 March 2011

நேர்மை என்றால் என்ன?

நேர்மை என்பது நமக்கு நாமே உண்மையாக ஒழுகுதல் ஆகும்.

நேர்மை என்பது உண்மை பேசுதல்.
நேர்மை என்பது பொய்யுரையாமை
நேர்மை என்பது களவு செய்யாமை
நேர்மை என்பது வஞ்சனை செய்யாமை
நேர்மை என்பது பிறரை ஏமாற்றாமை
நேர்மை என்பது கபடமற்ற நடத்ததை

யார்  நேர்மையானவர்?

நேர்மையானவர் உண்மை பேசுவார்; மனமறிய பொய் பேசமாட்டார்; அவருடைய சொல்லில் உண்மை இருக்கும்; பிறர் அறிந்திலர் என்பதற்காகத் தம் மனம் அறிந்த ஒன்றை மறைத்துப் பொய் பேச மாட்டார்.

நேர்மையானவர் களவு செய்ய மாட்டார்; ஏமாற்ற மாட்டார்; வஞ்சனை செய்ய
மாட்டார். அவர் சொல்லிலும் செயலிலும்  உண்மை இருக்கும்.

அவர் சொல் தவறாதவர். எதைச் செய்கிறேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார். அவர்சொல்லிலும் செயலிலும்  முரண்பாடு இருக்காது.

நேர்வழியில் தவறாமல்  நடந்து, நல்வழியில்  பொருள் தேடுவார்; வஞ்சகதினால் பொருளோ, பதவியோ, அதிகாரமோ தேடமாட்டார்.

அவர் கபடமற்றவர்; நடத்தையில் ஒளிவு மறைவு இல்லாதவர்; வெளிஉலகில்
நல்லவர்போல் நடித்து மற்றவர் காணாமல் தீயொழுக்கத்தில் ஒழுகமாட்டார்.

உண்மையில்லாதவற்றை உண்மையென்று பேசமாட்டார்; பொய்யை மெய்போல புனைந்துரைக்க மாட்டார்; அவர் நம்படத்  தகுந்தவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்;

2 comments:

  1. நேர்மையான சிந்தனைகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லது நன்றி 🙏💐

    ReplyDelete