Tuesday 26 April 2011

நம் பலவீனங்கள்

நம் அனைவருக்கும் பல பலவீனங்கள் உண்டு. ஆதலால் தவறுகள் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. நாம் அனைவருக்கும் விருப்பும் வெறுப்பும் அறியாமையும் உண்டு. ப‌லவீனங்கள் நம் எல்லாரிடமும் வெவ்வேறு அளவில் விளங்குகின்றன.

அறியாமையில் வாழும் ஒரு மனிதனின் அருகில் சென்று பார்ப்போம். அவரது மனம் தொந்தரவுகளாலும், குழப்பங்களாலும், இருளாலும் தெளிவிழந்து  உள்ளதைக் காணலாம்.. எதிர்பாராத மாற்றங்களால் உண்டாகும் மாற்றங்களும் நிறைவேறாத ஆசைகளும்  கவலையை ஊண்டாக்குகின்றன.

கவலையை உண்டாக்கக் காரணமாக உள்ள ஆசை எனும் உந்துதலை ஊட்டி  வளர்ப்பதற்கு முக்கிய காரணம் அறியாமையே!  அறிவால் அறியாமையை அகற்றப்படும் பொழுது அச்சமும் கவலையும் மறைகின்றன.

யாரையும் குறை கூறாமல் தவறு எங்கே என்று தேட வேண்டும். சிக்கல்களைப் பிற இடத்தில் தேடுவதில் பயன் ஏது? பலவீனங்களை ஒத்துக் கொள்ள வேண்டும். மனிதன் ஏதேனும் காரணங்கள் கண்டுபிடித்து தனது செயல்களை நியாயப்படுத்தி தான் மாசு அற்றவன் என் போலி தோற்றத்தை உருவாக்க முயல்கிறான்.

பிறர் குற்றம் காண்பது எளிது.அறிதேயாம் தன்குற்றம் காண்பது. குற்றம் சாட்டப்படாதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. உங்களுக்கு உள்ளது பெரிய பிரச்னை என்றால் அதை சிறிதாக்கமுயலுங்கள்.சிறிய பிரச்னை என்றால் அதை இல்லாததாக்க  முயலுங்கள்.

No comments:

Post a Comment