Friday 8 April 2011

சினத்தை வெல்லும் வழி


சினம் கொண்டு  பெறருக்குத் தீங்கிழைப்போர், இவ்வாறு சிந்திக்க வேண்டும்:

பிறர் த‌ம் மன‌தில் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைத்தால், அது எனக்கு வேதனையும் துன்பமும் தருமே! அது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லையே!  அதுபோல், நான் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைத்தால், அது அவருக்கும் வேதனையும் துன்பமும் தருமே! அது அவருக்கு மகிழ்ச்சி  தராதே!

பிறர் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைப்பதை விரும்பாத நான், எப்படிச் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைப்பது?அது எனக்கு வேதனையும், துன்பமும் தருமே! அது  அவருக்கு மகிழ்ச்சி தராதே.

சினம் கொண்டு தீங்கிழைப்போர், அதன் காரணமாகவே  தம் பெருமையை இழைப்பார்களே! பிறரால் வெறுக்கப்படுவார்களே!


சினம் கொண்டு தீங்கிழைப்போர், தீங்கிழைத்ததன் காரணமாகவே இங்கும்  தண்டிக்கப்பட்டு, உடலைவிட்டு உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும் தண்டிக்கப் படுவார்களே!

இவ்வாறு சிந்தித்து, சினத்தை தீமை என அறிந்து, அதன் மேல் வெறுப்படைந்து, அதை விட்டுவிட வேண்டும். அதை மறந்துவிட வேண்டும்.

வாழ்வில் சுகத்தையும், அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும் கெடுக்கும் சினத்தை  மறப்பதால் நன்மையே வரும்,  தீமை ஏதுமில்லை. சினத்தை அணைத்துக் கொள்வதால் துன்பமே வரும், நன்மை  ஏதுமில்லை. ஆகவே, சினத்தை மறந்தோருக்கு சினத்தால் இனி துன்பமே இல்லை.

எவருடைய குற்றங்குறைகளும், தாமாகவே விலகுவதில்லை. சினமும்  அதுபோல்தான்.  உடலுக்கு நோய் வந்தால், தக்க மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். அதுபோல், தம்முள்ளிருந்தே தம்மைக்  கொள்ளும்  சினத்தையும் தக்க முறைகளால்தான் வெல்ல வேண்டும்.

கோபத்தினால் மாசுபட்டுள்ள மனத்தையும் சரியான முறைகளால்தான் சுத்தப்படுத்த முடியும்.

அதாவது, சரியான பயிற்சிகளால்தான் சினத்தை வெல்ல முடியும். சினத்தின் பிடியிலிருந்து  மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 1) ஆய்வும் நுண்ணறியும்
2) உறுதி கொள்ளுதல்
3)மன்னிப்புக் கோருதல்
4)பிறர் பிழை பொருத்தல்
5)விழிப்புணர்வும் நிதானமும்
6)பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும்
7) இடைவிடாத முயற்சி

2 comments:

  1. பயிற்சியும் முயற்சியும் சினம் தவிர்க்க உதவும்

    ReplyDelete
  2. சினம் இறக்கக் கற்றாலும்
    சித்தியெல்லாம் பெற்றாலும்
    மனம் இறக்கக் கல்லார்க்கு
    வாயேன் பராபரமே!....எனும் மகான் தாயுமானவரின் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

    நன்றி.

    ReplyDelete